தேசிய நெசவுக்கழகத்தில் பணி

நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.டி.சி.,) என்பது அடிப்படையில் நெசவு சார்ந்த பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு 23 ஆலைகள் நாடு தழுவிய அளவில் உள்ளன. இந்த நிறுவனம் மத்திய அரசின் நெசவுத்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பிரிவிலான டெக்ஸ்டைல் மற்றும் பினான்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள்: மேனேஜ்மெண்ட் டிரெய்னி - டெக்ஸ்டைல் மற்றும் மேனேஜ்மெண்ட் டிரெய்னி - பினான்ஸ்
வயது: இந்த இரண்டு பதவிகளுக்குமே அதிகபட்ச வயது 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: டெக்ஸ்டைல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் டெக்ஸ்டைல் டெக்னாலஜி பிரிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். நிதிப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ., அல்லது சி.எம்.ஏ., படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: டெக்ஸ்டைல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கேட் தேர்வு-2017 அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள். நிதிப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்கள் தகுதிப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
கட்டணம்: ரூ.300/-ஐ டி.டி., வாயிலாக National Textile Corporation Ltd., New Delhi என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க: முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும். அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
கடைசி நாள்: 2017 செப்., 30.
இணையதள முகவரி: www.ntcltd.org/Writereaddata/Downloads/Co
Comments
Post a Comment